வெள்ளி, 3 மே, 2013

               கொட்டுது பாரங்கு மழைநீரு
                    எங்கள் தாகம் தணிக்கின்ற தண்ணீரு
                கல்லில் பட்டுத் தெறிக்குது பன்னீரு அதில்
                    பறந்து போகும் எங்கள் கண்ணீரு
                காகம் கரையுது காட்டுக்குள்ளே சின்ன
                     நண்டு நுழையுது சேற்றுக்குள்ளே
               தங்கத் தமிழர்கள் வீட்டுக்குள்ளே
                     மனம் சுற்றுது மழைநீன்ச்ன் பாட்டுக்குள்ளே
                சொட்டு சொட்டாகத்தான் ஒன்று சேர்த்து நாங்கள்
                     செட்டாக மழைநீரை சேகாச்ப்போம்
                நிலத்தடி நீன்ச்னை உயர்த்திடுவோம் நித்தம்
                     இறக்கின்ற இயற்கைக்கு உயிர் கொடுப்போம்
                                                              

வியாழன், 11 ஏப்ரல், 2013

உன் இருவிழி பார்வை போதுமடி


அணுக்கரு உலையடி இதயம்
   அளித்திட வேண்டுமே உபயம் - உன்னை
நினைத்திடும் ஒவ்வொரு நிமிடம்
   ஆற்றலை உமிழ்ந்திடும் தருணம்
நியூட்ரான் அன்பினால் தாக்கினாய்
   யுரேனியத் தீயினை மூட்டினாய்
காட்மியத் தகடுகள் ஏற்றினாய் - பின்
   காதலின் கனநீர் பாய்ச்சினாய்
எரிபொருள் ஏதும் தேவையில்லை - உன்
   இருவிழிப் பார்வை போதுமடி
மறுபதில் என்பது ஏதுமின்றி - என்
   மனமது வினைகளைத் தொகுத்திடுமே...

சனி, 6 ஏப்ரல், 2013

செந்தமிழ்ப் பயணம்

        கடவுள் வாழ்த்து

எண்ணிய எண்ணமெல்லாம்
   புண்ணிய செயல்களாக்கி
புவியினை சுழலச் செய்து
   திண்ணிய நெறி கொண்டோர்க்கு
திகட்டிடும் துன்பம் நீக்கி
   வண்ணமென நின்றவரை
வாய் மணக்க வாழ்த்திடவோ
   மனதார நினைத்திடவோ
கரமிரண்டை சிரம் மேலே
   கனமாக்கி வணங்கிடவோ
முத்தொழிலும் செய்கின்றேன்
    முக்கண்ணா உன் அருளால்

       வேந்தன் வருகை

திண்ணமென வளர்ந்து நிற்கும்
  வனப்புமிகு இளம் பெண்ணின்
கன்னமென செழித்திருக்கும்
   மாங்கனியின் மாநகரம்
விண்ணளவில் மலைகள் நிற்கும்
  தென்னகரின் எட்டுத் திக்கும்
சுற்றியெங்கும் சூழ்ந்து நின்று
  காண்பவரின் கண்ணைச் சொக்கும்
ஏரிக்காடு இங்கிருக்கும்
  கோரிமேடு அருகிருக்கும்
குடகுமலை காவிரியும்
  வளைகுடாவை பார்த்திருக்கும்
கொங்கு நாட்டுக் கிழக்காலே
  செயில் அங்கு உருக்காலை
மாநிலத்தின் மண்ணினிலே
  மாமரங்கள் நிறைந்திருக்கும்
சேலம் மாநகரினிலே
  தமிழ்வேந்தன் வாழ்ந்து வந்தான்


                                                             தொடரும்......