சனி, 6 ஏப்ரல், 2013

செந்தமிழ்ப் பயணம்

        கடவுள் வாழ்த்து

எண்ணிய எண்ணமெல்லாம்
   புண்ணிய செயல்களாக்கி
புவியினை சுழலச் செய்து
   திண்ணிய நெறி கொண்டோர்க்கு
திகட்டிடும் துன்பம் நீக்கி
   வண்ணமென நின்றவரை
வாய் மணக்க வாழ்த்திடவோ
   மனதார நினைத்திடவோ
கரமிரண்டை சிரம் மேலே
   கனமாக்கி வணங்கிடவோ
முத்தொழிலும் செய்கின்றேன்
    முக்கண்ணா உன் அருளால்

       வேந்தன் வருகை

திண்ணமென வளர்ந்து நிற்கும்
  வனப்புமிகு இளம் பெண்ணின்
கன்னமென செழித்திருக்கும்
   மாங்கனியின் மாநகரம்
விண்ணளவில் மலைகள் நிற்கும்
  தென்னகரின் எட்டுத் திக்கும்
சுற்றியெங்கும் சூழ்ந்து நின்று
  காண்பவரின் கண்ணைச் சொக்கும்
ஏரிக்காடு இங்கிருக்கும்
  கோரிமேடு அருகிருக்கும்
குடகுமலை காவிரியும்
  வளைகுடாவை பார்த்திருக்கும்
கொங்கு நாட்டுக் கிழக்காலே
  செயில் அங்கு உருக்காலை
மாநிலத்தின் மண்ணினிலே
  மாமரங்கள் நிறைந்திருக்கும்
சேலம் மாநகரினிலே
  தமிழ்வேந்தன் வாழ்ந்து வந்தான்


                                                             தொடரும்......
                

1 கருத்து: