கடவுள் வாழ்த்து
புண்ணிய செயல்களாக்கி
புவியினை சுழலச் செய்து
திண்ணிய நெறி கொண்டோர்க்கு
திகட்டிடும் துன்பம் நீக்கி
வண்ணமென நின்றவரை
வாய் மணக்க வாழ்த்திடவோ
மனதார நினைத்திடவோ
கரமிரண்டை சிரம் மேலே
கனமாக்கி வணங்கிடவோ
முத்தொழிலும் செய்கின்றேன்
முக்கண்ணா உன் அருளால்
வேந்தன் வருகை
திண்ணமென வளர்ந்து நிற்கும்
வனப்புமிகு இளம் பெண்ணின்
கன்னமென செழித்திருக்கும்
மாங்கனியின் மாநகரம்
விண்ணளவில் மலைகள் நிற்கும்
தென்னகரின் எட்டுத் திக்கும்
சுற்றியெங்கும் சூழ்ந்து நின்று
காண்பவரின் கண்ணைச் சொக்கும்
ஏரிக்காடு இங்கிருக்கும்
கோரிமேடு அருகிருக்கும்
குடகுமலை காவிரியும்
வளைகுடாவை பார்த்திருக்கும்
கொங்கு நாட்டுக் கிழக்காலே
செயில் அங்கு உருக்காலை
மாநிலத்தின் மண்ணினிலே
மாமரங்கள் நிறைந்திருக்கும்
சேலம் மாநகரினிலே
தமிழ்வேந்தன் வாழ்ந்து வந்தான்
தொடரும்......
நன்று. கவிதைகள் தொடர வாழ்த்துக்கள் நண்பா.
பதிலளிநீக்கு